
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில்குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகாமையில் நேற்று நண்பகல் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கிய மற்றுமொரு குடும்பஸ்தர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது