
பலாலி விமான நிலையத்தின் சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.
அபிவிருத்திப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதால், ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதிக்குள் சேவைகளை ஆரம்பிக்க முடியுமென அவர் கூறியுள்ளார்.
பயணிகள் விமானங்களை இயக்குவதற்கு ஏற்றவாறு, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.