
பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கோட்டபாய ராஜபக்ஸவை கைது செய்வதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளபபட்டு வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவலை தாய் நாட்டிற்கான இராணுவ அமைப்பின் சட்டத்தரணி அஜித் பிரசன்ன இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் வெளிப்படுத்தியுள்ளார்.
கோத்தாவை கைதுசெய்வதற்கான முயற்சியில் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுவதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.