
பொன்னாலை – காரைநகர் வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து கடலுக்குள் பாய்ந்தது. தெய்வாதீனமாக சாரதி காயங்களுடன் தப்பித்தார்.
இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் பொன்னாலை – காரைநகர் பாலத்தில் கடலுக்குள் தடம்புரண்டது.
பாலத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த குடிதண்ணீர் குழாய்கள் இந்த விபத்தினால் சேதமடைந்தன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.