
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிராக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட மூலத்துக்கு ஆதரவாக ஐந்து மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொடவினால் கடந்த முதலாம் திகதி நாடாளுமன்றில் தனிநபர் சட்ட மூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்ட மூலத்தை சட்டமாக்குமாறு ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே, சட்ட மூலத்துக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்களையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதேவேளை, பந்துல லால் பண்டாரியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையானது சட்டத்திற்கு முரணானது என சட்டமா அதிபர் தனக்கு அறிவித்தாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.