
கிளிநொச்சி – ஜெயந்தி நகரிலுள்ள வீடொன்றிலிருந்து தாய் மற்றும் மகனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரின் சடலங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
70 வயது மதிக்கத்தக்க விஷ்ணுகாந்தி வள்ளியம்மை மற்றும் அவரது மகனான 35 வயது மதிக்கத்தக்க லிங்கேஷ்வரன் ஆகியோரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த இருவரின் சடலங்களும் காயங்களுக்கு உள்ளான நிலையில் காணப்படுவதால், இந்த சம்பவம் கொலையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.