
ஈரானில் உள்ள புஷேர் அணு உலை அருகே 5.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 5.23 மணியளவில் புஷேர் அணு உலைக்கு 53 கிமீ கிழக்கே இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக கூறப்படுகின்றது.
பூமிக்கு அடியில் 38 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால் கொஞ்சம் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
எனினும், புஷேர் அணு உலை இதைவிடவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திலும் ஒன்றும் ஆகாத விதமாக பாதுகாப்பாக உள்ளதால், ஈரான் அரசு ஊடகம் இந்த நிலநடுக்கம் எதுவித தகவலும் தெரிவிக்கவில்லை.
கடந்த 2003ஆம் ஆண்டு 6.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் பாம் என்ற நகரம் தரைமட்டமானது. இதில் சுமார் 26,000 பேர் இதில் உயிரிழந்தனர்.
பாம் நகரம் புஷேர் அணு உலைக்கு அருகில்தான் உள்ளது, ஆனால் 2003ஆம் ஆண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் அணு உலைக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
ஈரான் முக்கியமான ஃபால்ட்லைனின் மேல் உள்ளதால் நிலநடுக்கங்கள் இங்கு ஏறக்குறைய வழமையான ஒன்றுதான்.