
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன. அதற்கமைய குறித்த பெறுபெறுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி, தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்தும் பார்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் இம்முறை 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.