
கடந்த 2004 ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்த உறவினர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு கல்முனையில் நடைபெற்றது.
இதற்கமைய கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலில் காலை 9 மணியளவில் விஷேட து-ஆ பிராத்தனை இடம்பெற்றதுடன் சூரிய கிரகணத் தொழுகை கல்முனை முஹ்யித்தீன் ஜூம்-ஆ பெரிய பள்ளிவாசலில் காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.
கடந்த 2004இல் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையினால் அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பகுதி அதிக உயிரிழப்புக்களைச் சந்தித்த பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.