
சுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் 15ஆம் ஆண்டு நினைகூரல் நிகழ்வு தமிழர் தாயகம் எங்கும் உறவுகளால் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.
இதன்படி, யாழ்ப்பாணத்தில் வடமராட்சி கிழக்கு, உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் ஆழிப் பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு உறவுகள் மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 9.35 மணிக்கு இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
யாழில் பல்வேறு இடங்களில் ஆழிப்பேரலை நினைவுகூரல்!