
வவுனியா – வைரவபுளியங்குளம் குளக்கட்டு வீதி பகுதியில் வயோதிப பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த வயோதிப பெண் சகோதரனின் வீட்டில் வசித்து வந்த நிலையிலேயே இன்று (திங்கட்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
பொன்னம்பலம் செல்லம்மா (வயது 75) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவரென்பது பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாருடன் இணைந்து தடயவியல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.