
இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.
அவர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில், விசாரணைகளுக்காக, இன்று ஆஜரானார். அதனையடுத்தே அவர் அங்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
மனநல பரிசோதனை அறிக்கை கிடைத்ததன் பின்னர், அந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
அந்த பணியாளர் வழங்கிய சாட்சியங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் அவரின் மனநிலை குறித்து பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் பணித்தது.