
பாதுகாப்பு செயலாளராக முன்னாள் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அவர் சற்றுமுன்னர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நியமித்தார்.
அவர் 1982ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி 2வது லெப்டினனனாக இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்டார்.
இராணுவத்தில் பல பதவிகளை வகித்துள்ள அவர் இறுதிப் போரின்போது இராணுவத்தின் 53 ஆவது படையணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தி இருந்தார்.
2016ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அவர் பிரேசிலுக்கான இலங்கை தூதுவராகவும் கடமையாற்றியிருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது