
இந்தியப் பிரஜைகள் மூவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
1.540 கிலோ கிராம் தங்கம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறைத்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் சென்னை செல்ல முயற்சித்தபோதே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 29, 32 மற்றும் 34 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கபட்டுகின்றது.
இந்நிலையில் கைதான மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.