
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதல் முடிவை பெரும்பாலும் அன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக இருக்கும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகளில் தபால் மூல வாக்குகள் தொடர்பான பெறுபேறுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேர்தல் விதிமுறைகளை மீறிய ஊடகங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முடிந்தவுடன் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.