
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கிரிக்கெட் உலகக்கோப்பை, இந்த விளையாட்டின் ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போன்றது. தற்காலத்தில் கிரிக்கெட்டின் வடிவம் வெகுவாக மாறியுள்ளது. 20-20 கிரிக்கெட் போட்டிகள் கிரிக்கெட் பற்றிய பார்வை மற்றும் அணுகுமுறையை மாற்றியுள்ளன. இவையனைத்தும் இருந்த போதும் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலகக்கோப்பையை பார்க்க இந்தியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கும்.
இதற்கு காரணம் 1983-ல் நடந்த உலகக்கோப்பை. 1983ல் நடந்த உலகக்கோப்பையின்போது இந்திய அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றது. யாரும் நினைக்காத வண்ணம் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வலிமையான மேற்கிந்திய அணியை வென்றது. இது இந்தியாவில் கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் பிரபலத்துக்கு ஒரு தொடக்கமாக இருந்தது.