
ஒரு கார் ஷோரூமில் பணியாற்றும் மனோகர் (சிவகார்த்திகேயன்), எதிர்பாராதவிதமாக பிரபல தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளரான கீர்த்தனாவுடன் (நயன்தாரா) மோத நேர்கிறது.
கீர்த்தனா திமிர் பிடித்த பெண்ணாக இருப்பதால் மனோகரைத் தொடர்ந்து அவமானப்படுத்துகிறார். அதனால் அவளைத் தொடர்ந்து வெறுப்பேற்றுகிறான் மனோகர். முடிவில் என்ன நடக்குமென்பதை யூகிப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கடினமான காரியமல்ல.
ஓரளவுக்கு வெற்றிகரமான ஹீரோவாக உருவெடுத்தவுடன், தமிழ் சினிமா கதாநாயகர்கள் பாரம்பரியமாக ஒரு சில படங்களில் நடிப்பார்கள்.
அதாவது, திமிர்பிடித்த (படித்த, தன்னம்பிக்கைமிக்க, வேலைபார்க்கும் என்று புரிந்துகொள்க) பெண்களை அடக்கி, ஒடுக்கி காதலிக்கவைத்து, திருமணம் செய்யும் கதை உள்ள படங்களில் நடிப்பது. அதிலும் அந்தப் பெண்ணும் சற்று பதிலடி கொடுத்தால் இன்னும் சுவாரஸ்யமாக தோற்கடிக்கலாம். 14 படங்களுக்குப் பிறகு அந்த இடத்திற்கு வந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.