
பெல்ஜியத்தின் மருந்திற்கான “ராயல் அகாடமி” கடந்த வாரம் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட செய்தியை பரிந்துரைத்துள்ளது. அதில் குழந்தைகள், இளம் வயதினர், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் சைவ உணவை பின் பற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
பெல்ஜியத்தில் உள்ள 3 சதவீத குழந்தைகள் தாவரங்கள் மற்றும் தாவர பொருட்கள் மட்டுமே உண்கின்றனர். இறைச்சி, முட்டை, பால் பொருட்கள் மற்றும் பிற விலங்குகளில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவுகளிலிருந்து விலகி, சைவ உணவு வகைகளை பின்பற்றுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கட்டுப்பாடான உண்ணும் திட்டம் தவிர்க்க முடியாத பல ஊட்டச்சத்து குறைபாடுகளை உருவாக்குகின்றது, மேலும் இதனை ஒழுங்காக கண்காணிக்கப்படாவிட்டால், குறைபாடுகள் மற்றும் பின்தங்கிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அகாடமி அறிவித்துள்ளது. தேசிய மனித உரிமைகள் அமைப்பை சார்ந்த பிரதிநிதி ஒருவர் மருத்துவ குறிப்பை கோரினர், மேலும் அவர் குழந்தை மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களுக்கு வழிகாட்டியாகவும் உள்ளார். பெல்ஜிய அரசு நிறுவனங்களுக்கான ஆலோசனை நிறுவனமாக ராயல் அகாடமி ஆஃப் மெடிசின் “Royal Academy of Medicine of Belgium” செயல்படுகிறது.