
இலங்கை புத்தக விற்பனையாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக முதன்முறையாக யாழில் கண்காட்சி ஒன்று இடம்பெறவுள்ளது.
வடமாகாண ஆளுநரின் அனுசரணையில் நடைபெறவுள்ள கண்காட்சி 20 வருடங்களாக தொடர்ச்சியாக கொழும்பு BMICH இடம்பெற்றுவந்தது.முதன்முறையாக பரீட்சாத்த முயற்சியாக நடைபெறும் மேற்படி கண்காட்சியில் நூற்றுக்கணக்கான வடக்கின் நூலகங்களும் பாடசாலைகளும் பயன்பெறவுள்ளது!
இந்த பரீட்சாத்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் தொடர்ச்சியாக வருடாந்தம் கொழும்பைபோன்று யாழில் கண்காட்சி இடம்பெறும்!
கொழும்பில் மேற்படி கண்காட்சிக்கு இருக்கும் மக்கள் ஆதரவும் அந்த மக்களுடைய வாசிப்பு பழக்கவழக்கங்களும் நாம் அறிந்ததே!
மேற்படி கண்காட்சியில் பதிப்பகங்களையோ படைப்புகளையோ காட்சிப்படுத்த விரும்புபவர்கள் இந்தமாதம் 17ம் திகதிக்கு முன்னதாக அறியத்தரும் பட்சத்தில் உரிய தொடர்புகளை ஏறபடுத்தி தர இயலும்.
தொடர்புக்கு – Biruntha Kannan